வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மேட்டூர்  நீர்மட்டம் 2 நாளில் 2.26 அடி குறைந்தது

மேட்டூரிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் 2

News image
Updated On :2 மார்ச் 2013, 2:14 am IST

மேட்டூரிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் 2 நாளில் 2.26 அடி குறைந்தது.

 காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முடிவடைந்ததும், ஆண்டுதோறும் ஜனவரி 28ஆம் தேதி அணையிலிருந்து பாசனத் தேவைக்காகத் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும். இதையடுத்து, குடிநீர்த் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

இந்த நிலையில், நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முடிந்த நிலையில், அணையிலிருந்து புதன்கிழமை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

 அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 324 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டதால், புதன்கிழமை 33.99 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், வியாழக்கிழமை 32.91 அடியாகவும், வெள்ளிக்கிழமை 31.73 அடியாகவும் குறைந்தது.

 அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட 2 நாள்களில் நீர்மட்டம் 2.26 அடி குறைந்தது. தற்போது அணையின் நீர் இருப்பு 8.23 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.